/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி
/
நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி
நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி
நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
கரூர்: கரூர் அருகே, நீரேற்று நிலையத்தில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூரில் காவிரியாற்றின் குறுக்கே, நீரேற்று நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் மூலம், கரூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், நீரேற்று நியைத்துக்கு செல்ல, இரண்டு பக்கமும் உள்ள சுவர்கள் சேதமடைந்துள்ளது.
இதனால், நீரேற்று நிலையத்தில் பகல், இரவு பணிக்கு செல்லும், ஊழியர்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். வரும் ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில், நீரேற்று நிலையத்தின் கீழ், காவிரியாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அப்போது, ஊழியர்கள் நீரேற்று நிலையத்துக்கு, நடந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, நெரூர் நீரேற்று நிலையத்தில் சேதமடைந்துள்ள, தடுப்பு சுவர்களை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

