/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
/
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
ADDED : பிப் 11, 2025 07:23 AM
கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, நொய்யல் வாய்க்-காலில் திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணையில் இருந்து கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்நி-லையில்,
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு வரும் தண்ணீரும் நின்றது.இதனால், ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில் திறக்கப்பட்ட, 26 கன அடி
தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 20.46 அடியாக
இருந்தது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை வினா-டிக்கு, 438 கன அடி தண்ணீர் வந்தது. அந்த
தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ்
கட்டளை வாய்க்கால் ஆகிய நான்கு கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி
வினாடிக்கு, 17 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 430 கன அடி தண்ணீரும்,
புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின்
நீர்-மட்டம், 72.18 அடியாக இருந்தது.