/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் கோடைகாலம் விற்பனைக்கு வந்த தர்ப்பூசணி
/
நெருங்கும் கோடைகாலம் விற்பனைக்கு வந்த தர்ப்பூசணி
ADDED : ஜன 15, 2024 10:35 AM
கரூர்: கோடைகாலம் நெருங்கும் நிலையில், கரூரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, கோடைகாலமாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்கழி மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கோடைகாலங்களில், உடலுக்கு ஏற்படும் சூட்டை குறைக்கும் வகையில், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நீர்மோர் ஆகியவைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்நிலையில், கரூர் உழவர்சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில் தர்ப்பூசணி விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதிகளில், கரூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தர்ப்பூசணி, ஒரு கிலோ, 20 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.