sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது

/

கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது

கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது

கரூரில் 3வது திருமணம் 'கல்யாண ராணி' கைது


ADDED : டிச 26, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 30, கொசு வலை கம்பெனி ஊழியர்.

இவருக்கும், கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரேணுகா, 36, என்ற பெண்ணுக்கும் கடந்த, 12ல், மண்மங்கலம் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர், கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன், திருமணம் நடந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ரேணுகாவிடம், ரமேஷ் கேட்டபோது, ஆத்திரமடைந்த ரேணுகா, வரதட்சணை வழக்கு தொடர்வேன் என ரமேஷை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ரமேஷ், கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதையறிந்த ரேணுகா, நேற்று முன்தினம் இரவு வெளியூருக்கு தப்பிச் செல்ல, கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது, கரூர் மகளிர் போலீசார், ரேணுகாவை கைது செய்தனர்.

மேலும், ரமேஷ் - ரேணுகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்த, கோவையைச் சேர்ந்த புரோக்கர்கள் ஜெகநாதன், ரோஷினி, தேவக்கோட்டையைச் சேர்ந்த பழனிகுமார் ஆகியோரை, மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us