/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூன் 24, 2025 01:00 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 535 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஏழு பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் கருப்பு கண்ணாடி, முழங்கை ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் சக்கர நாற்காலி, 27,845 ரூபாய் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எட்டு பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ஆறு பேருக்கு, 14,000 ரூபாய் மதிப்பில் என மொத்தம், 1.41 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர்கள் பிரகாசம், ஸ்ரீ சுவாதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.