ADDED : பிப் 10, 2026 05:24 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலை-மையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்-தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, 474 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு தலா, 3,825 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவி, சக்கர நாற்காளி, ஒரு பயனாளிக்கு, 15,700 ரூபாய் மதிப்-பில், ஒரு பயனாளிக்கு, 3,700 ரூபாய் மதிப்பிலும் நடைபயிற்சி வாகனம் என மொத்தம், 27,050 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்-கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், சப் கலெக்டர் பிரகாசம், சமூகநல அலுவலர் செல்வி, கலெக்-டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோ-கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

