UPDATED : மே 13, 2025 06:06 AM
ADDED : மே 13, 2025 01:34 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 316 மனுக்களை மக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஊன்றுகோல் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட, 28,670 ரூபாய் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை
சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ,
சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.