sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குப்பை கிடங்காக மாறும் கிணறுகள்

/

குப்பை கிடங்காக மாறும் கிணறுகள்

குப்பை கிடங்காக மாறும் கிணறுகள்

குப்பை கிடங்காக மாறும் கிணறுகள்


ADDED : மார் 02, 2026 09:06 AM

Google News

ADDED : மார் 02, 2026 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சியையொட்டி பல பகுதிகளில் விவசாய பணி நடந்து வந்தது. அங்கு, கிணறுகள் மூலம் பாசன செய்து வந்தனர். தற்போது, நகரமயமாக்கல் காரணமாக வயல்கள் பெரும்பாலும் பிளாட் போட்டு விற்கப்பட்டு வருகின்றன. இங்கு, ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் இந்த கிணறு திறந்து கிடக்கின்றன. கிணற்றை மூடாததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இப்பகுதியில் சிறுவர்கள் விளையாடும்போது தவறிவிழும் அபாயம் இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நீண்டகாலமாக கிணறுகள் திறந்த நிலையிலேயே மூடப்படாமல் காணப்படுகிறது. இதில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us