நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., திருமலை ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 31, கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 28. இவர்களுக்கு அருண்குமார், 10, என்ற மகன், அனுஷ்கா, 8, ஆபிசா, 3, என இரு மகள்ள் உள்ளனர்.
கடந்த, 12ம் தேதி காலை வழக்கம்போல், மணிகண்டன் கட்டட வேலைக்கு திருச்சிக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜலட்சுமி, மகள்கள் அனுஷ்கா, ஆபிசா என மூன்று பேரையும் காணவில்லை. இதுகுறித்து பல இடங்களில் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கணவர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி, மகள்களை தேடி வருகின்றனர்.