ADDED : ஏப் 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியை சேர்ந்தவர் மணி, 55; டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா, 48; குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 10ல் வீட்டில் இருந்து சரோஜா வெளியே சென்றுள்ளார்.
இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் சரோஜா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரோஜாவின் கணவர் மணி அளித்த புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.