ADDED : ஜூலை 20, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகம் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சோனம்,39. இவர் கடந்த, 16 காலை வீட்டில் இருந்து, கடைக்கு மளிகை பொருட்களை வாங்க சென்-றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும், சோனம் செல்லவில்லை.
அதிர்ச்சியடைந்த கணவர் ராஜா, 42, போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக் கின்றனர்.