sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்

/

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்


ADDED : அக் 31, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, செல்லாண்டிபாளையத்தில் காட்டுப்பன்றி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், 3 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. இங்கு வனப்பகுதி மிகவும் குறைவு என்பதால், மிருகங்கள் நடமாட்டம் இருக்காது. சமீப காலமாக கோவை, திண்டுக்கல், ஈரோடு மாவட்ட வனபகுதியிலிருந்து வெளியேறும் மான், காட்டு எருமைகளின் நடமாட்டம் இங்கு காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, செல்லாண்டிபாளையத்தின் வயல் பகுதியில் காட்டுப்பன்றி நடமாட்டம் உள்ளது.

இங்குள்ள குப்பையை கிளறி உண்ணும் காட்டுப்பன்றிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அங்குள்ள மக்கள், அதனை விரட்டி அடித்து வருகின்றனர். காட்டுப்பன்றி நடமாட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காணப்படுகிறது.

இது குறித்து கரூர் வனவர் ஈஸ்வரி கூறுகையில்,'' கரூர் பகுதியில் காட்டுப்பன்றி வர வாய்ப்பு இல்லை. இங்கு, வளர்க்கப்படும் பன்றிகளை பார்த்து விட்டு, காட்டுப்பன்றி என்று கூறலாம். இருந்தாலும் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us