sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்கப்படுமா

/

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்கப்படுமா

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்கப்படுமா

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்கப்படுமா


ADDED : டிச 31, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-கோவை தேசிய சாலையில் க.பரமத்தி உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. க.பரமத்தி பஸ் ஸ்டாப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்களில் மட்டும் அந்த பகுதியில், போலீசார் பணியில் உள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்-சத்தில், கோவை சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால், க.பரமத்தி பஸ் ஸ்டாப் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்-டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து, க.பரமத்தி பகுதியினர் கூறியதா-வது: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, க.பரமத்தி பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வரு-கிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், விபத்து நடக்கும் பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். அப்-போது, க.பரமத்தி பஸ் ஸ்டாப் மற்றும் சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் மூலம் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன், சந்தை பேட்டை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள க.பரமத்தி பஸ் ஸ்டாப் பகுதியில் ரவுண் டானா அமைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us