/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா
/
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா
ADDED : டிச 07, 2024 06:45 AM
கரூர்: கரூர் அருகே செட்டிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செட்டிப்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகரப் பகுதியில் இருந்து சுக்காலியூர், செட்-டிப்பாளையம், அப்பிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர
வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடி-யாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில்
விபத்துகளும் நடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, செட்டிப்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க
கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது, வாக-னங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால்,
செட்டிப்பா-ளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய
நெடுஞ்சா-லையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, விபத்துகளை தடுக்க செட்டிப்பாளையம்
பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.