/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
/
சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
ADDED : டிச 03, 2024 02:05 AM
சின்னதாராபுரம் அருகே
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
அரவக்குறிச்சி, டிச. 2-
சின்னதாராபுரம் அருகே, எலவனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளான நஞ்சைக்காளக்குறிச்சி, நொச்சிபள்ளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களிடம் தமிழக அரசு வழங்கியுள்ள இலவச பஸ் பாஸ் உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்த, மாணவர்கள் படிக்கும் பள்ளி வழியாக பஸ்கள் செல்வதில்லை என, வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டாக அரசு பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். எனவே, சேதமான சாலையை சரிசெய்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ, மாணவியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.