sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

/

சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

சின்னதாராபுரம் அருகே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?


ADDED : டிச 03, 2024 02:05 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னதாராபுரம் அருகே

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

அரவக்குறிச்சி, டிச. 2-

சின்னதாராபுரம் அருகே, எலவனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளான நஞ்சைக்காளக்குறிச்சி, நொச்சிபள்ளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களிடம் தமிழக அரசு வழங்கியுள்ள இலவச பஸ் பாஸ் உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்த, மாணவர்கள் படிக்கும் பள்ளி வழியாக பஸ்கள் செல்வதில்லை என, வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டாக அரசு பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். எனவே, சேதமான சாலையை சரிசெய்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ, மாணவியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us