/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் கம்பி
/
பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் கம்பி
ADDED : ஜன 16, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை மற்றும் முசிறியை இணைக்கும், காவேரி பாலத்தில், 20 நாட்களுக்கு மேலாக சிமென்ட் தளம், சரி செய்யப்பட்ட தார்ச்சாலை ஆகியவை பழுது ஏற்பட்டு, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலத்தில் செல்லும் பஸ்கள், கார், கனரக வாகனங்கள் செல்லும் போது டயர் சேதமடைகிறது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் உள்ள சாலை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. உடனடியாக பாலம் முழுவதும் சாலையை ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

