ADDED : ஏப் 07, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சின்னதாராபுரம் போலீசார் நஞ்சைக்கா-ளிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த, மாரிமுத்து என்பவரது மனைவி கருப்-பாத்தாள், 44, என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்றது கண்-டுபிடிக்கப்பட்டது.உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

