ADDED : செப் 02, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;சின்னதாராபுரத்தில், சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சின்னதாராபுரம் போலீசார், தன்னாசியப்பன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாமுண்டி என்பவரது மனைவி பாப்பாத்தி, 55, என்பவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 27 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.