ADDED : நவ 25, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, க.பரமத்தி அருகே, விஸ்வநாதபுரி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
க.பரமத்தி போலீசார், விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள அண்ணா நகர் பகுதியில், வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்ற சண்முகம் என்பவரின் மனைவி சித்ரா, 56, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

