ADDED : டிச 17, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, டிச. 17-
குளித்தலை அடுத்த, மாயனுார் காசாகாலனியை சேர்ந்தவர் கவுதமன், 31, கூலி தொழிலாளி. இவரது மனைவி கோசலை கடந்த, 13 அதிகாலை, 5:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, பாம்பு கடித்து விட்டதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.