sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரசவத்துக்கு பின் பெண் சாவு; அரசு மருத்துவமனை முற்றுகை

/

பிரசவத்துக்கு பின் பெண் சாவு; அரசு மருத்துவமனை முற்றுகை

பிரசவத்துக்கு பின் பெண் சாவு; அரசு மருத்துவமனை முற்றுகை

பிரசவத்துக்கு பின் பெண் சாவு; அரசு மருத்துவமனை முற்றுகை


ADDED : ஜூலை 11, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரசவத்துக்கு பின் பெண் இறந்ததால், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே முத்தாக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யோகப்பிரியா, 24, கர்ப்பமாக இருந்தார். கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5ம் தேதி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின் யோகப்பிரியாவுக்கு, அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 12 மணியளவில் இறந்தார்.

தகவலறிந்து யோகப்பிரியா உறவினர்கள், கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குவிந்தனர். முறையாக சிகிச்சை அளிக்கவில்லை; பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்ததே இறப்புக்கு காரணம் என கூறி, மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த கரூர் பசுபதிபாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us