/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க' எம்.பி., ஜோதிமணி பேச்சால் பெண்கள் கொந்தளிப்பு
/
'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க' எம்.பி., ஜோதிமணி பேச்சால் பெண்கள் கொந்தளிப்பு
'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க' எம்.பி., ஜோதிமணி பேச்சால் பெண்கள் கொந்தளிப்பு
'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க' எம்.பி., ஜோதிமணி பேச்சால் பெண்கள் கொந்தளிப்பு
ADDED : ஜன 05, 2025 01:21 AM
கரூர், கரூர் தொகுதியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, காங்., எம்.பி., ஜோதிமணி சென்ற போது, கேள்வி கேட்ட பெண்களிடம், 'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க...' என, பேசியதால், கொந்தளித்த பெண்கள், ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏழு மாதங்களுக்கு பின், தற்போது கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று, கரூர் தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டியில், நன்றி தெரிவிக்க சென்ற போது, அவரிடம் பெண்கள் கேள்வி கேட்டனர். கடந்த ஆண்டு மார்ச், 28ல் கரூர் அருகில் கோடங்கிபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய போது, ஆரத்தி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த பெண்கள், 'ஐந்து ஆண்டுகளாக உங்களை பார்க்கவில்லை. இப்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்களே' என்று கேள்வி எழுப்பினர். நேற்று, கோடங்கிபட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை எம்.பி.,ஜோதிமணி தொடங்கினார்.
அப்போது, ஆரத்தி எடுக்க நின்று கொண்டிந்த பெண்கள், 'ஓட்டு கேட்க வந்த போது, கோடங்கிபட்டியில் பாலத்திற்கு அளந்து விட்டு போய்விட்டனர். விரைவில் பாலம் கட்டப்படும் என்று சொன்னீர்கள். அதுக்கு அப்புறம் எதுவும் செய்யவில்லை. அங்கு நடந்த விபத்தில் எத்தனையோ உயிர்கள் போய்விட்டது' என்றனர்.
அதற்கு ஜோதிமணி, 'ஓட்டு கேட்க வந்து தான் ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும், இப்படி கச்சேரி ஆரம்பிக்காதீங்க. போன தரமும், நீங்க தான் கேள்வி கேட்டீங்க, ஒவ்வொரு முறையும் ஒரே ஆளை, 'செட்டப்' பண்ணி பேச வைக்கின்றனர். அடையாளத்தை மாற்றியாவது பேச வையுங்கள். இப்படி தான் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க. அப்படிதான் அவங்க பேசுவாங்க' என்றார். அங்கு கூடியிருந்த பெண்கள், ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, '13 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்களை கொண்டு வந்ததாகவும், இன்னும் ஒரு மாதத்தில் கோடங்கிபட்டி பகுதியில் மேம்பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என, மீண்டும் எம்.பி., ஜோதிமணி வாக்குறுதி கொடுத்து விட்டு கிளம்பினார்.