sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலத்துக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மும்முரம்

/

கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலத்துக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மும்முரம்

கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலத்துக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மும்முரம்

கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலத்துக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மும்முரம்


ADDED : அக் 21, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 21, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட பாலம் கட்டுமான வேலை தொடங்க ஏதுவாக, சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலை மறி-யலில் ஈடுபடுவர். விபத்து ஏற்படும் பகுதிகளில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு, மண்மங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் பணி தொடங்கவுள்ளது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. வீரராக்கியத்தில், 17.6 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலத்தில் பாலம் பணிகள் நடக்கிறது. இந்த பாலம் பணிகள் தொடங்க ஏதுவாக, இரண்டு புறங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, அதில் மண், ஜல்லி கற்களை நிரப்பி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து, அந்த சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விட்ட பின், பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us