/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கான்கிரீட் போர்டில் பைக் மோதி தொழிலாளி பலி
/
கான்கிரீட் போர்டில் பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : ஜன 21, 2025 06:54 AM
குளித்தலை: கான்கிரீட் போர்டில் பைக் மோதி, கூலி தொழிலாளி உயிரி-ழந்தார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மையிலாப்பூரை சேர்ந்-தவர் ஆரோக்கியசாமி, 60. இவரது மகன் மார்ட்டின் சாந்தகுமார், 32, கூலி தொழிலாளி. இவர் திருச்சி உய்யக்கொண்டான் திரு-மலை சண்முகா நகரில், வாடகை
வீட்டில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 16ல் ஆர்.டி. மலையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்த்துவிட்டு, தனக்கு சொந்த-மான ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் திருச்சி தோகைமலை நெடுஞ்சாலையில்,
நாயக்கர் தோட்டம் அருகே சென்ற போது, தனியார் வீட்டுமனை பிளாட்டின் விளம்பர கான்கிரீட் போர்டில் பைக் மோதியது. இதில் தலை மற்றும் முழங்காலில் காயம் ஏற்-பட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி
அரசு மருத்-துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

