sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

/

காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு


ADDED : ஆக 23, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, காகித ஆலையில் மயங்கி விழுந்து ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி கீழ் ஒரத்தை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 56; இவர் புகழூர் காகித ஆலையில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன், காகித ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, கண்ணன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

இதுகுறித்து, கண்ணனின் மகன் சுரேஷ், 30, அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us