ADDED : மே 10, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கட்டுமான வேலையின் போது, மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி இறந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா, 40, கட்டட தொழிலாளி.
இவர் க.பரமத்தி அருகில் ஆரியூரில் உள்ள வீட்டில், கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில், ராஜா படுகாயமடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.