ADDED : ஜன 02, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனுார் பஞ்., கீழமாயனுார் கிராமத்தை சேர்ந்தவர்  முத்துராஜ், 66, விவசாய கூலி தொழிலாளி.  இவர் நேற்று காலை, 6:30 மணியளவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்-சாலையில், கிழக்கு பகுதியில் உள்ள கடையில்  டீ குடித்து விட்டு,  சாலையில் நடந்து சென்றார்.
அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்-றது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார். பொது மக்கள் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விபத்து ஏற்ப-டுத்தி தப்பி ஓடிய காரை கரூரில் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், கரூரை சேர்ந்த நவீன் என்பவர் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.  இதுகுறித்து, மாயனுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

