/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முற்செடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
/
முற்செடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்
ADDED : அக் 30, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை
அடுத்த, பணிக்கம்பட்டி முதல் அய்யர்மலை செல்லும் நெடுஞ்சாலை வரை,
இருபுறங்களிலும் வளர்ந்திருந்த முற்செடிகள், செடி கொடிகள்
அகற்றப்பட்டன.
குளித்தலை, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர்
செந்தில்குமரன் மற்றும் உதவி பொறியானர் ஜெயபாலன் ஆகியோருக்கு
மக்கள் விடுத்த கோரிக்கையின்படி, நேற்று காலை, 9:00 மணியளவில் சாலை
இன்ஸ்பெக்டர் சேகர் மேற்பார்வையில், சாலை பணியாளர்கள் முற்செடிகள்,
செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த சாலை
துாய்மையாக காணப்படுகிறது.