/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழிகாட்டி போர்டில் திருத்தி எழுத வேண்டும்
/
வழிகாட்டி போர்டில் திருத்தி எழுத வேண்டும்
ADDED : மே 08, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டியில், இணை ப்பு சாலைகளில், பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, போர்டில் உள்ள ஊர்ப்பெயரின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் வழி காட்டி போர்டுகள் தெளிவாக இல்லாததால், வாகன ஓட்டிகள் திருச்சி அல்லது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றனர். எனவே, வெங்ககல்பட்டி பகுதியில் உள்ள, அழிந்து போன போர்டில் புதிதாக விபரங்களை எழுத, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

