/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 25, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்-னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம், நெடுஞ்சாலை அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.
கடந்த சில நாட்களாக கோவில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி-யான அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை ஆகியவை நடந்தன. நேற்று மாரி-யம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்து, மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்று பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.