ADDED : ஜூலை 21, 2025 08:01 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானி அருகே தலைப்பாயனுாரை சேர்ந்த ரத்னா மகள் விமலா, 23; இவரின் கணவர் சித்தோடு, மரவபாளையத்தை சேர்ந்த சாந்தகுமார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
தண்ணீர்பந்தல்பாளையம் அருகே தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு, ரத்னா அளித்தபுகாரின் படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
