ADDED : டிச 11, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருடிய வாலிபர் கைது
குளித்தலை, டிச. 11-
குளித்தலை அடுத்த,  கீரனுார் பஞ்.,  கொட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன், 47, கூலி  தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில், தோகைமலை பஸ் ஸ்டாப் உரக்கடை அருகில் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்கிவிட்டு,  திரும்பி வந்து பார்த்தார்.
அப்போது ஒருவர் பைக்கை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அர்ஜூனன் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அவரை  பைக்குடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வயலுார் கிராமத்தை சேர்ந்த கார்த்தி, 25, என்பது தெரிய வந்தது. தோகைமலை போலீசார் வழக்கு  பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

