ADDED : டிச 10, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனம் மோதி
வாலிபர் சாவு
ப.வேலுார், டிச. 10--
ப.வேலுார் அருகே, ஓவியம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் விக்னேஷ், 28; இவர், நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு டூவீலரில், நண்பர் ஜெயக்குமார், 25, உடன் சென்றுள்ளார். கோனுார், கந்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், விக்னேஷ் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த விக்னேஷின் உறவினர்கள், அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கோரி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.