/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : டிச 23, 2024 10:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வீரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 39; இவர் கடந்த, 14 மாலை கரூர் - கோவை சாலை ரெட்டிப்பாளையம் பகுதியில், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த, சென்டர் மீடியன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த வெங்கடாசலம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.