/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணியின் போது தவறி விழுந்த இளைஞர் காயம்
/
பணியின் போது தவறி விழுந்த இளைஞர் காயம்
ADDED : ஏப் 12, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி : பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருபவர் முத்துசாமி மகன் மணிகண்டன், 26.
இவர் நேற்று முன்தினம், பள்ளப்பட்டி மேற்கு தெருவில் உள்ள ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக, மின்மாற்றியில் ஏறி பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்மாற்றியிலிருந்து கால் இடறி கீழே விழுந்தார். இதில் மணிகண்டனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.பள்ளப்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் சையத் பஷீர் அப்பாஸ் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

