sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்

/

உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்

உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்

உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்


ADDED : ஜன 12, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறைகுற்ற புலனாய்வில் மாநில முதலிடம்

கிருஷ்ணகிரி: சேலம் டி.எஸ்.பி., வடிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, பறக்கும்படை தனி தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து செயல்பட்டதால் கடந்த, 2024ல், ரேஷன் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட, 245 வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டன. இது மாநில அளவில் முதலிடம் ஆகும். அதேபோல, 176 டன் ரேஷன் அரிசி பறிமுதலுடன், 115 வாகனங்களையும், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது மாநில அளவில் மூன்றாமிடம் ஆகும்.சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புத்துறையினருக்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வு காவல்துறை இயக்குனர் சீமா, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us