sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2025 02:02 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், தி.மு.க., அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் குமார் பேசியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆணவ படுகொலை, பாலியல் சீண்டல்கள், போதை பொருள் விற்பனை தொடர்ந்து நடக்கிறது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பட்டியலின மக்கள், தி.மு.க., ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். ஆணவ படுகொலைக்கான, தடுப்பு சட்டத்தை இந்த அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வேங்கை வயல் வழக்கை இந்த சமூக நீதி அரசு, சி.பி.ஐ.,க்கு மாற்ற, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர்கள் அனுமந்தன், தியாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us