sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்

/

பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தல்


ADDED : மார் 13, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், மத்திய மாவட்ட, பா.ம.க., சார்பில், உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். மகளிரணி மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரி, இளம்பெண்கள் அணி தலைவி கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர், பெண்கள் தினம் குறித்து பேசினர். தொடர்ந்து, மகளிர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

விழாவில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு, சுதந்திரமாக பணிபுரிதல், பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகரத்தில் வெளியூரில் இருந்து வரும் பெண்களுக்கு பொது கழிப்பிட வசதி இல்லை. இதுகுறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெண்களின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் பொதுகழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும், உரிமையையும் வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us