/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதையில் ஸ்டேஷன் வந்த வாலிபர்புத்தாடை கொடுத்து போலீசார் அறிவுரை
/
போதையில் ஸ்டேஷன் வந்த வாலிபர்புத்தாடை கொடுத்து போலீசார் அறிவுரை
போதையில் ஸ்டேஷன் வந்த வாலிபர்புத்தாடை கொடுத்து போலீசார் அறிவுரை
போதையில் ஸ்டேஷன் வந்த வாலிபர்புத்தாடை கொடுத்து போலீசார் அறிவுரை
ADDED : ஜன 18, 2025 01:47 AM
போதையில் ஸ்டேஷன் வந்த வாலிபர்புத்தாடை கொடுத்து போலீசார் அறிவுரை
போச்சம்பள்ளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 30; போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு தன் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். அவரின் மனைவி நாகரசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததை அடுத்து விசாரணைக்காக நேற்று முருகன், போதையில் தள்ளாடியபடி போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், போலீசார், முருகனிடம் கேட்டதற்கு, ஐந்து நாட்களாக சாப்பிடாமல் குடித்து வருவதாக கூறினார். போலீசார், அவரின் மீது தண்ணீர் ஊற்றி தலைக்கேறிய போதையை தெளிய வைத்தனர். முருகனுக்கு டீ மற்றும் டிபன் வாங்கிக்கொடுத்ததுடன், புத்தாடை வாங்கி கொடுத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.