தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்திருவிளக்கு, கன்னியா பூஜை

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்திருவிளக்கு, கன்னியா பூஜை

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்திருவிளக்கு, கன்னியா பூஜை


ADDED : மார் 10, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்ஓசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம், தாம்ப்ராஸ் ஓசூர் கிளை சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய், நொடியின்றி மக்கள் வாழவும், சுவாசினி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு மற்றும் சுவாசினி பூஜையில் பங்கேற்றனர். பத்திரகாசி ஆஸ்ரம சங்கர சாக்தானந்த சரஸ்வதி குகை சுவாமிகள் தலைமை வகித்து, பூஜையை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, 11 பெண் குழந்தைகளுக்கு மாலைகள் அணிவித்து, கன்னியா பூஜை செய்யப்பட்டது. பத்திரகாசி ஆஸ்ரம சங்கர சாக்தானந்த சரஸ்வதி குகை சுவாமிகள், பெண் குழந்தைகளுக்கு அருளாசி வழங்கினார். தமிழ்நாடு பிராமணர் சங்க, ஓசூர் கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கிருஷ்ணசாமி, மகளிர் அணி செயலாளர் ரோகினி, இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன், அமைப்பு செயலாளர் கணேஷ், இணை செயலாளர்கள் ராமன், குமார், ஆலோசகர்கள் சத்திய வாகீஸ்வரன், நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us