sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 08, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.

இந்நிலையில், கடந்த, சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சித்தேரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தடுப்பணைக்கு, 25 கனஅடி நீர்வரத்து வந்தது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 29.85 அடிக்கு தண்ணீர் உள்ளது.






      Dinamalar
      Follow us