/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதியவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய உறவினர்கள் சாலைமறியல்
/
முதியவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய உறவினர்கள் சாலைமறியல்
முதியவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய உறவினர்கள் சாலைமறியல்
முதியவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய உறவினர்கள் சாலைமறியல்
ADDED : ஜூன் 19, 2024 10:41 AM
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த கோணம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 65; இவர் கடந்த, 3 மாதங்களுக்கு முன் மாயமானார். நேற்று முன்தினம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பென்னாகரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது சாவுக்கு காரணமானரை கைது செய்ய வேண்டும், அவருக்கு ஆதரவாக நடந்து கொண்ட கம்பைநல்லுார் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாலை, 4:30 மணிக்கு, கம்பைநல்லுார்-காரிமங்கலம் சாலையில், கோணம்பட்டி பஸ் நிறுத்தத்தில், கோவிந்தசாமியின் உடலுடன், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடம் வந்த எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 5:30 மணிக்கு கலைந்து சென்றனர்.