/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அருங்காட்சியக அரும்பொருட்களை பாதுகாக்க மாணவர்களுக்கு பயிற்சி
/
அருங்காட்சியக அரும்பொருட்களை பாதுகாக்க மாணவர்களுக்கு பயிற்சி
அருங்காட்சியக அரும்பொருட்களை பாதுகாக்க மாணவர்களுக்கு பயிற்சி
அருங்காட்சியக அரும்பொருட்களை பாதுகாக்க மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 29, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி : பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு, தமிழரும் தொழில்நுட்பமும் என்னும் பாடத்திட்டத்தில், தமிழர்களின் பண்டைய தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள பாடதிட்டம் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரும்பொருட்கள் மற்றும் பாதுகாத்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.
இதில், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு மாணவ, மாணவியர், 60 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, அருங்காட்சியக அரும்பொருட்களான சங்க கால செங்கல், கட்டு
மானங்கள், சிற்பங்கள், நினைவுக்கல் மற்றும் அதன் வகைகள், பீரங்கி, போர் கருவிகள், தேர் சிற்பங்கள், தமிழக நாணயங்கள், உலோக திருமேனிகள் போன்றவற்றின் தொன்மை உருவாக்கிய
விதம், அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரும்பொருட்களை வேதியியல் முறைப்படி பாதுகாத்தல் தொடர்பான பயிற்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் வழங்கினார். ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் செய்திருந்தனர்.

