/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 01:18 AM
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
கிருஷ்ணகிரி:கோடை விடுமுறையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங் கில் உள்ள நீச்சல் குளத்தில், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்கட்ட நீச்சல் பயிற்சி கடந்த, 1ல் துவங்கி வரும், 13 வரை நடக்கிறது. பயிற்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் துவக்கி வைத்தார். முதல்கட்ட பயிற்சியில், 11 மாணவர்கள், 7 மாணவியர் என மொத்தம், 18 பேருக்கு, முறையாக பயிற்சி பெற்ற அரசு சார்பில் நியமித்துள்ள பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2ம் கட்ட பயிற்சி வரும், 15 முதல், 27 வரையும், 3ம் கட்ட பயிற்சி, 29 முதல் மே, 11 வரையும், 4ம் கட்ட பயிற்சி மே, 13 முதல், 25 வரையும், 5ம் கட்ட பயிற்சி, 27 முதல் ஜூன், 8 வரையும் வழங்கப்பட உள்ளது. காலை, 7:00 முதல், 10:00 மணி வரையும், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக, 1,500 ரூபாய் மற்றும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன், https://sdatservices.tn.gov.in/#/membership-booking/register என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 90801 44183, 74017 03487, 73056 24554 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.