ADDED : பிப் 28, 2025 01:51 AM
அ நிறம் | அளவு
போதை மீட்பு, சிகிச்சைமறுவாழ்வு மையம் திறப்பு
கிருஷ்ணகிரி:தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இப்பழக்கத்தை கைவிடும் வகையில், தமிழகத்தின், 25 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 'கலங்கரை' ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, காந்திசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இம்மையம் துவங்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி தலைமை வகித்து பேசினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், துணை முதல்வர் சாத்விகா, மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது , மாவட்ட மனநல மருத்துவர் கோபி, மனநல மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
