sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 02, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில், 35 பள்ளி விடுதிகள், 12 கல்லுாரி விடுதிகள் உள்ளன. இங்கு தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் 'கலைத்திருவிழா' என்ற பெயரில் கடந்த 28ல், நடந்தது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரை, பேச்சு போட்டிகளில், 60 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், ஒவ்வொரு போட்டிக்கும் முறையே முதல் பரிசு, 2ம் பரிசு மற்றும் 3-ம் பரிசுக்கான கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பாராட்டினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா மற்றும் விடுதி காப்பாளர்கள்

கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us