ADDED : மார் 08, 2025 01:44 AM
அ நிறம் | அளவு
பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து சாவு
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, ரெட்டிப்பட்டி ஊ.ஒ.ந.நி., பள்ளியில், 50 மாணவர்கள், 48 மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்று மாலை, ஆறாம் வகுப்பு மாணவியர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மகள் இந்துமதி,11, மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, ஊத்தங்கரை போலீசார்
விசாரிக்கின்றனர்.
