/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரியில் சுட்டெரித்த வெயில்: தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'
/
தர்மபுரியில் சுட்டெரித்த வெயில்: தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'
தர்மபுரியில் சுட்டெரித்த வெயில்: தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'
தர்மபுரியில் சுட்டெரித்த வெயில்: தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'
ADDED : மார் 30, 2025 01:21 AM
தர்மபுரியில் சுட்டெரித்த வெயில்: தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று அதிகபட்சமாக, 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில், சில வாரங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, பகல், இரவில் அனல் காற்று வீசியது. இதில் மார்ச், 29 முதல் தர்மபுரி உட்பட, 10 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம், 100.4, நேற்று, 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவானது. அதிகப்படியான வெயில் தாக்கத்தால், மதிய நேரத்தில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து, சாலை வெறிச்சோடி காணப்பட்டது.