/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மஹாவீர் ஜெயந்தி மதுபான கடைகள் மூட உத்தரவு
/
மஹாவீர் ஜெயந்தி மதுபான கடைகள் மூட உத்தரவு
ADDED : ஏப் 08, 2025 01:58 AM
மஹாவீர் ஜெயந்தி மதுபான கடைகள் மூட உத்தரவு
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் செயல்பாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் என அனைத்தும் ஏப்., 10 மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்., 9 அன்று இரவு, 10:00 மணி முதல், ஏப்., 11 காலை, 12:00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது.
இதை மீறி, எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.