sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது

/

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது


ADDED : ஏப் 08, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 47, விற்பனையாளராக உள்ளார். கடந்த, 1 நள்ளிரவு கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 16 பெட்டி மதுபானங்களை திருடி சென்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே சாப்ரானப்பள்ளியை சேர்ந்த சபரி, 25, வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே கூச்சனுார் சீனிவாச நகரை சேர்ந்த தீனா, 24, காந்தி கணவாய் பகுதியை சேர்ந்த ஹரிஸ், 33, கர்நாடகா மாநிலம், பல்லாரியை சேர்ந்த நாகராஜ், 24, ஆகியோர், பணம் திருடுவதற்காக டாஸ்மாக் கடைக்குள் புகுந்ததும், பணம் இல்லாததால் மதுபானங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த, 4 மாதங்களுக்கு முன், கைதான தீனாவுடன் சேர்ந்து, சாப்ரானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ், 20, என்பவர், இருதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை திருடியது தெரிந்தது. இதனால் சந்தோைஷயும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம், 12 பெட்டி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us